Thursday, February 10, 2011

ijk தனித்து போட்டி -பாரி வேந்தர்

மதுரை : தமிழக சட்டசபை தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது என்று அக்கட்சியின் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

தமிழக சட்டசபை தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள இந்திய ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் பொதுத் தொகுதிக்கு ரூ. 2000 கட்டி விண்ணப்பம் பெற வேண்டும்.

அதே போல தனித்தொகுதிக்கு ரூ. 1000 செலுத்தி விண்ணப்ப படிவத்தினை நாளை முதல் சென்னை- அசோக் நகரில் உள்ள கட்சித் தலைமை நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அனுப்ப கடைசி நாள் பிப்ரவரி 25- ம் தேதி ஆகும்.

வரும் 26-ம் தேதி பெரம்பலூரில் நடைபெற உள்ள விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் வைத்து வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
English summary
India Jananayaka Katchi leader Paari Vendhar has announced that IJK will contest alone in the TN assembly election. The candidates list will be released on february 26 in the Perambalur conference, he told

Friday, May 21, 2010

New Political Party IJK started By Dr.T.R.Pachamuthu


2011-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவிப்பு
திருச்சி மாவட்டத்தில் மே மாதம் 29 இல் முதல் மாநாடு -வேந்தர் அறிவிப்பு

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து இந்திய ஜனநாயக கட்சியை தொடங்கினார். இந்த கட்சி 2011-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்சி உதயம்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து புதியதாக அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அந்த கட்சிக்கு இந்திய ஜனநாயக கட்சி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த கட்சியின் நிறுவன தலைவர் டி.ஆர்.பச்சமுத்து கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களுக்கு சேவை செய்தால் உண்மையான மன நிம்மதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த கட்சியை தொடங்கி உள்ளேன். நான் பிறந்த சமுதாய மக்களுக்காக சேவை செய்ய பாரி நற்பணி மன்றம் என்ற சேவை மையத்தை தொடங்கி ஒருவருடம் ஆகிறது. இந்த மன்றத்தின் மூலமாக ஏழை மக்களுக்காகவும், சுகாதார மேம்பாட்டிற்காகவும் பல உதவிகளை செய்துள்ளேன். பாரி நற்பணி மன்றத்தில் 3 லட்சம் இளைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். பாரி நற்பணி மன்றம் இன்று அரசியல் கட்சியாக உதயமாகிறது.

கொடி அறிமுகம்

இந்த கட்சி முறையாக தேர்தல் கமிஷனிடம் பதிவு செய்யப்பட்டு இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்திய ஜனநாயக கட்சி தமிழகத்தில் மட்டும் அல்லாமல் தேசிய கட்சியாவதற்கும் முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறோம். எல்லா மாநிலத்திலும் எங்கள் கட்சியில் சேர இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர்.

எங்கள் கட்சியின் கொடியின் மேல் பகுதி சிவப்பு நிறத்திலும், நடுப்பகுதி வெள்ளை நிறத்திலும், கீழ்பகுதி சிவப்பு நிறத்திலும் உள்ளது. மேல் பகுதியின் சிவப்பு நிறம் தியாகத்தையும், வெள்ளை நிறம் அமைதியையும், கீழ் பகுதியில் உள்ள சிகப்புநிறம் புரட்சியையும் குறிக்கிறது.

நாளைக்கே ஆட்சியைப் பிடித்து பெரிய தலைவர் ஆகவேண்டும் என்ற எண்ணம் எல்லாம் எனக்கு கிடையாது. 2011-ம் ஆண்டு நிச்சயமாக தேர்தலில் போட்டியிடுவோம். எங்கள் சக்தியையும், எங்கள் கொள்கைகளையும் மதித்து கூட்டணிக்காக அழைத்தால் அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்வோம். இல்லாவிட்டால் தனித்து போட்டியிடுவோம்.

நான் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி. தேர்தலில் போட்டியிடமாட்டேன். மேலும் எந்த பதவியும் வகிக்கமாட்டேன்.

முதல் மாநாடு

இந்த கட்சியின் முதல் மாநில மாநாடு திருச்சியில் வருகிற 29-ந் தேதி நடைபெறுகிறது. மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் பேர் கலந்துகொள்கிறார்கள். இந்த கட்சியின் தலைவராக கோவை தம்பி, பொதுச்செயலாளராக ஜெயசீலன், பொருளாளராக வழக்கறிஞர் ராஜன், அகில இந்திய இளைஞர் அணி அமைப்பு செயலாளராக மதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். எங்கள் கட்சியில் சேரவேண்டும் என்றால் முதலில் பாரி நற்பணி மன்றத்தில் சேரவேண்டும். பின்புதான் கட்சியில் உறுப்பினராக சேரமுடியும். எங்கள் கட்சியின் கொள்கை அனைவருக்கும் உயர்கல்வியும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கவேண்டும் என்பதாகும்.

இவ்வாறு டி.ஆர்.பச்சமுத்து கூறினார்.

Saturday, February 20, 2010

SRM University Chancellor conferred Docotorate by UK University

Chennai: It was a day of reckonning for the SRM University chancellor Thandavarayapuram Ramasamy Pachamuthu when he was conferred the doctorate by the Faculty of Technology, Engineering and Environment, Birmingham City University( BCU )today.


The title was conferred for the excellent work rendered by him in the field of Engineering and Technology eduction .


The BCU in its citation has detailed the extra ordinary work done by T R Pachamuthu and his family in bringing education closer to the people of India.


Delighted T R Pachamuthu in his acceptance speech said that he is greatly honoured by the conferrement of the degree as it is a honour for the SRM University. acknowledging long ties between UK and India.


By conferreing the honour the BCU is ascertaining the path of multicultural ethos of the great city of Birmingham.


The students enrolling themselves in Engineering and Medicine streams have a human face and they should learn more languages economic and other social and behavavioural sciences subjects and reciprocally the students of humanities should understand biology and other natural science subjects so that they can equip themselves to live intelligently in the world.


Advocating the scheme of multidimensional curriculamT R Pachamuthu stressed the importance splitting the curriculam to the needs of the modern day saying 50% of the time to be allocated for reading compulsory subects,25% on releated electives and the rest of 25% on fulfilling the needs of one's passion.


Concluding the speech quoting couplets from Thirukkural he said Learn properly and follow accordingly and advocated that compassion and kindness for all human beings.

Monday, December 21, 2009

பார்கவ குல மாநில பொது குழு Meeting


20.12.2009 அன்று திருச்சி SRM வளாகத்தில் பொது குழு மீட்டிங் நடைபெற்றது.
அதில் tenth, +2 exam இல் அதிக மார்க் வாங்கிய நம் இன மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வேந்தர் வழங்கினார் .











Sunday, November 8, 2009

வெற்றிவேற்கை

அதிவீரராம பாண்டியர் என்பார் பாண்டிய நாட்டு கொற்கையை பகுதியை 450 ஆண்டுகளுக்கு முன் ஆண்டசிற்றரசனன் ஆவார். வரதுங்கபாண்டியர்கு இளவல். நைடதம், கூர்ம புராணம், இலிங்க புராணம், காசி காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதி முதலிய பிற நூற்களையும் இயற்றியுள்ளார்.

கடவுள் வாழ்த்து

பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரணஅற் புதமலர் தலைக்கணிவோமே.

நூல்

1. எழுத்தறி வித்தவன் இறைவ னாகும்.

2. கல்விக் கழகு கசடற மொழிதல்.

3. செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.

4. வேதியர்க் கழகு வேதமும் ஒழுக்கமும்.

5. மன்னவர்க் கழகு செங்கோல் முறைமை.

6. வணிகர்க் கழகு வளர்பொரு ளீட்டல்.

7. உழவர்க் கழகுஏர் உழுதூண் விரும்பல்.

8. மந்திரிக் கழகு வரும்பொரு ளுரைத்தல்.

9. தந்திரிக் கழகு தறுகண் ஆண்மை.

10. உண்டிக் கழகு விருந்தோ டுண்டல்.

11. பெண்டிர்க் கழகுஎதிர் பேசா திருத்தல்.

12. குலமகட் லழகுதன் கொழுநனைப் பேணுதல்.

13. விலைமகட் கழகுதன் மேனி மினுக்குதல்.

14. அறிஞற் கழகு கற்றுணர்ந் தடங்கல்.

15. வற்ஞர்க் கழகு வறுமையில் செம்மை.
16.
தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை
வானுற வோங்கி வளம்பெற வளரினும்
ஒருவர் கிருக்க நிழலா காதே.
தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு
மன்னர்க் கிருக்க நிழலா கும்மே.
அதனால்,
பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர்
சிறியோ ரெல்லாம் சிறியரு மல்லர்
பெற்றோ ரெல்லாம் பிள்ளை களல்லர்
உற்றோ ரெல்லாம் உறவின ரல்லர்
கொண்டோ ரெல்லாம் பெண்டிரு மல்லர்.

17.
அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது.
சுடினும் செம்பொன் தன்னொளி கெடாது.
அரைக்கினும் சந்தணம் தன்மணம் அறாது.
புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது.
அடினும்பால் பெய்துகைப் பறாதுபேய்ச் சுரைக்காய்.
ஊட்டினும் பல்விரை உள்ளி கமழாது.
ஒருநாள் பழகினும் பெரியோர்க் கேண்மை
இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே.
நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நிர்க்குள் பாசிபோல் வேர்க்கொள் ளாதே.
பெருமையும் சிறுமையும் தான்தர வருமே.

18.
சிறியோர் செய்த சிறு பிழை யெல்லாம்
பெரியோ ராயின் பெறுப்பது கடனே.
சிறியோர் பெரும்பிழை செய்தன ராயின்
பெரியோரப் பிழை பொறுத்தலு மரிதே.
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே.

19.
கல்லா ஒருவன் குணநலம் பேசுதல்
நெல்லினுள் பிறந்த பதரா கும்மே.
நாற்பால் குலத்தின் மேற்பா லொருவன்
கற்றில னாயின் கீழிருப் பவனே
எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடியில் கற்றோரை மேல்வருக என்பர்
அற்வுடை ஒருவனை அரசைனும் விரும்பும்
அச்சமுள் ளடக்கி அறிவகத் தில்லாக்
கொச்சை மக்களைப் பெருதலின் அக்குடி
எச்சமற் றேமான் திருக்கை நன்றே.

20.
யானைக்கு இல்லை தானமும் தருமமும்
பூனைக்கு இல்லை தவமும் தயையும்
ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்

21.
சிதலைக்கு இல்லை செல்வமும் செருக்கும்
முதலைக்கு இல்லை நீத்தும் நிலையும்
அச்சமும் நாணமும் அறிவிலோர்க் கில்லை
நாளும் கிழமையும் நலிந்தோர்க் கில்லை
கேளும் கிளையும் கெட்டோர்க் கில்லை.

22.
உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா
குடைநிழலிருந்து குஞ்சர மூர்ந்தோர்
நடைமலிந் தோருர் நண்ணினும் ந ண்ணுவர்
சிறப்புஞ் செல்வமும் பெருமைய முடையோர்
அறக்கூழ்சாலை அடையினும் அடைவர்.
அறத்திடு பிச்சை கூவி இரப்போர்
அரசரோடி ருந்தர சாளினும் ஆளுவர்
குன்றத் தனைய இருநிதி படைத்தோர்
அன்றைப் பகலே அழியனும் அழிவர்
எழுநிலை மாடம் கால்சாய்ந் துக்குக்
கழுதை மேய்பாழா கினும் ஆகும்
பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ்
பொற்றொடி மகளிரும் மைந்தரும் செறிந்து
நெற்பொலி நெடுநக ராயினும் ஆகும்
மணஅணி அணிந்த மகளி ராங்கே
பிணஅணி அணிந்துதம் கொழுநரைத் தழீஇ
உடுத்த ஆடை கோடியாக
முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர்
இல்லோ ரிரப்பதும் இயல்பே இயல்பே
இரந்தோர் கீவதும் யடையோர் கடனே.

23.
நல்ல ஞானமும் வானமும் பெறினும்
எல்லாம இல்லை இல்லிலல் லோர்க்கே.

24.
தறுகண் யானை தான்பெரி தாயினும்
சிறுகண் முங்கிற் கோற்கஞ் சும்மே.

25.
குன்றுடை நெடுங்காடு ஊடே வாழினும்
புன்தலைப் புல்வாய் புலிக் கஞ்சும்மே
ஆரையும் பள்ளத் தூடே வாழினும்
தேரை பாம்பிற்கு மிகவஞ் சும்மே
கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டின்
கொடும் புலி வாழும் காடு நன்றே.

26.
சான் றில்லாத் தொல்பதி யிருத்தலின்
தேன்தேர் குறவர்த் தேயம் நன்றே.

27.
வித்தும் ஏரும் யுளவாய் இருப்ப
எய்த்தங் கிருக்கும் ஏழையும் பதரே.

28.
காலையும் மாலையும் நான்மறை யோதா
அந்தணர் என்போர் அனைவரும் பதரே.

29.
குடியலைந்து இரந்துவெங் கோலொடு நின்ற
முடியுடை இறைவனாம் முர்க்கனும் பதரே.

30.
முதலுள பண்டம்கொண்டுவா ணிபம்செய்து
அதன்பயன் உண்ணா வணிகரும் பதரே.

31.
தன்மனை யாளைத் தாய்மனைக் ககற்றிப்
பின்பவள் பாராப் பேதையும் பதரே.

32.
தன்மனை யாளைத் தனிமனை யிருத்தி
பிறமனைக் கேகும் பேதையும் பதரே.

33.
தன்னா யுதமும் தன்கைப் பொருளும்
பிறன்கைக் கொடுக்கும் பேதையும் பதரே.

34.
வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும்
சாற்றுவது ஒன்றைக் போற்றிக் கேண்மின்.
பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்
மெய்பொ லும்மே மெய்போ லும்மே
மெய்யுடை ஒருவன் சொல்லாட் டாமையால்
பொய்போ லும்மே பொய்போ லும்மே.
அதனால்
இருவர் சொல்லையும் எழுதரம் கேட்டே
இருவரும் பொருந்த உரையா ராயின்
மனுமுறை நெறயின் வழக்கிழந் தவர்தாம்
மனமுற மறுகிநின் றழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழிவழி ஈர்வதோர் வாளாகும்மே
பழியா வருவது மொழியா தொழிவது
சுழியா வருபுனல் இழியா தொழிவது.

35. துணையோ டல்லது நெடுவழி போகேல்

36. புணையோ டல்லது நெடும்புன லேகேல்.

37.
எழிலார் முலைவரி விழியார் தந்திரம்
இயலா தனகொடு முயல்வதா காதே.

38. வழியே ஏகுக வழியே மீளுக.

39. இவைகாண் உலகிற்கு இயலாம் ஆறே.

40. வாழிய நலனே வாழிய நலனே.